Wednesday, November 14, 2012

நம்பிக்கையை திடப்படுத்துங்கள்


   முன்னொரு   காலத்தில்  அமரிக்காவை   சேர்ந்த்தவர்   ஒருவர்  நடிகர் அகவேன்டும்  என்று  விரும்பினார்.

    ஆனால்   பல  தடவை    முயற்சிசெய்தும்   அவரால்    ஒரு  கோமாளியாகவே  நடிக்க  முடிந்தது.

     இதனால்  வாழ்க்கையை  கடும்  கவலையில்  கழித்தார்.

     பின்னர்  அவர்  ஒரு  அடியாளாக  இருந்து   வந்தார்.

    அவ்வாறு   இருந்து   வருகயில்   ஒரு
  சாத்திரியாரை  சந்தித்தார்.   அவரும் நான்  உமது   பலன்களை  கணித்து  வய்க்கின்றேன்   மாலை   வந்து   பெற்றுக் கொள்ளுங்கள்  எனக்கூற‌வே  அவரும்  மாலை  வந்தார் .

     ஜோசியர்  வெளியே  சென்றிருந்தார்  எனவே  அங்கிருந்த பெண்மணி ஒருவரிடம்  விசாரிக்கவே   அவழும்   பலன்   எழுதியிருந்த  கவைறை அவரிடம்  வழங்கினாள்

    அதிலே " நீ பெரும் நடிகன் ஆவாய் "  என்றிருந்தது.

    அதை பார்த்த பின்னர் அவருக்கு ஓர் புது நம்பிக்கை பிறந்தது.

   அவர் விடாமுயற்ச்சியுடன் மீன்டும் மீன்டும் முயாற்சிசெய்தார். முயற்ச்சியின்  பலனாக  அவர்   பெரும்   நடிகன் ஆனார்   ஒஸ்கார்  விருதும் வென்றார்

     பின்னர்    ஓர்    நாள்தான்  தெரிய வந்தது   ஜோசியரிடம்   இருந்து   பெற்றது தனது   பலன்   அல்ல  என்பது..........!

No comments:

Post a Comment