Tuesday, December 25, 2012

உயர்வாக சிந்தியுங்கள்...!

     ஒரு செல்வந்தர் தனது விலையுயர்ந்த அழகிய காரை ஒரு ஏழை சிறுவன் ஆவலுடன் பார்த்துக்  கொண்டிருப்பதை கண்டார். அச்சிறுவனை காரில் ஏற்றிக்கொண்டு ஒரு ரவுண்ட் போய் வந்தார் . 
    
      கார் சவாரிக்கு பிறகு சிறுவான் 
   '' உங்களது கார் மிகவும் அருமையாக இருக்கிறது . விலை மிகவும் அதிகமாக இருக்குமே ! இந்த காரின் விலை என்ன ? ''  என்றான் .

      அதற்கு அச்செல்வந்தர் , " எனக்கு தெரியாது இதை எனது சகோதரர் பரிசாக தந்தார் '' என்றார் .    அதற்க்கு சிறுவன் ,      ''அகா எவ்வளவு அருமையான சகோதரர் ! ''  என்று வியப்புடன் கூறினான் . 

       நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்கு தெரியும் . " உனக்கும் என் சகோதரன் போல் ஒருவன்  இருக்க வேண்டும் என்று தானே நினைகிறாய்?'' என்றார் செல்வந்தர் .

    அதற்க்கு அந்த சிறுவன் ''இல்லையில்லை!

    நான் உங்கள் சகோதரரை போல் இருக்க விரும்புகிறேன் ''

        சகோதரர் களே எப்போதும் அடுத்தவர்கள் எதிர்பார்ப்பை விட உயர்வாக சிந்தியுங்கள் 

No comments:

Post a Comment