Monday, January 7, 2013

நாம் உணவு உட்கொண்ட பின்பு தூக்கம் வருவது ஏன் தெரியுமா.?

இது உடலின் குருதிச் சுற்றோட்டத்திலேயே தங்கி உள்ளது.   உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் குருதி ஒரு குறிப்பிட்ட விகிதத்திலேயே செல்கிறது. ஆனால் நாம் உணவு உட்கொண்டதும் இந்த விகிதம் மாறுபடுகிறது. நாம் உணவு உட்கொண்டதும் இரைப்பையின் தொழிற்பாடு துரிதமடைவதால் , அந்தப் பகுதிக்கு குருதி அதிகம் தேவைப்படுகிறது.ஆகையால் மூளைக்குச் செல்லும் குருதியின் அளவு குறைவடைகிறது.  இதனால் மூளையின் செயற்பாட்டுத் திறனும் குறைவடையும். இதனாலேயே உணவு உட்கொண்டதும் ஒரு வித மந்த நிலை ஏற்படுகிறது.உணவு உட்கொண்டதும் தூக்கம் வர இதுவே காரணம்.





No comments:

Post a Comment