Friday, April 26, 2013

இதயம் பேசியது

சாதனைகள் படைக்க 
கையுதவிக்கு நின்று 
கை கொடுத்த 
என் பிரிய 
வலக்கரமே !

தனியாகப் போய்நின்று 
தானே இயங்க்குவேன் 
வலப்புறத்தான் 
நான் என்று 
வாயால் கெடாதே !

நானும் மூளையும்  
இடப்புறம் இருந்து 
இடையறாது 
வழங்கியதால் தானே 
உன்னில் 
இயக்கமே இருந்தது !

பிறகென்ன 
இடப்பக்கம் 
வலப்பக்கம் !

முட்டாள் கையே 
நீ 
முறுக்கிக் கொள்ளாதே !

என்னோடும் 
மூளையோடும் 
உன் 
தொடர்பு அறுபட்டால் 
நீ கையல்ல 
பிணம் 


by சடகோபன் 
மண்ணில் தொலைந்தத மனது தேடி ...

No comments:

Post a Comment